வன்னியர் சங்க கூட்டங்கள், மாநாடுகள், கோவில் மற்றும் திருமண விழாக்களில் வைப்பதற்காக நமது சமூக வரலாறு தொடர்பான பதாகைகளுக்கு படங்கள் மற்றும் செய்திகள் தருமாறு நமது உறவினர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர். அவர்களுக்காகவும் நமது வரலாறு எல்லா தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலும் சில பதாகைகளை வடிவமைத்துள்ளேன்.
நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப நமது சொந்தங்கள் தங்களது பெயர்களை பதாகைகளில் பயன்படுத்தி கொள்ளலாம்.
பதாகை வடிவமைப்பிற்கு உதவியாக இருந்த திரு. நா. முரளி நாயக்கர், தூண்டுகோலாக அமைந்த தென்காசி அருகே உள்ள ஆய்குடி கிராமத்தை சேர்ந்த திரு. ராமச்சந்திர படையாட்சி, உடன் இருந்த திருச்செந்தூர் அருகே உள்ள மெய் ஞானபுரத்தை அடுத்த சோலை குடியிருப்பை சேர்ந்த திரு. குருசாமி படையாட்சி, இந்த வலைப்பூவை மலர வைத்த திரு. அ. கார்த்திக் நாயகர் ஆகியோருக்கு நன்றி.